FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 13 ஜூலை 2026, 2:11 am IST
மின்வெட்டு - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் புதுக்கடை நகரும் ஒன்று. இங்கு பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், தொழிற்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அதிகம் உள்ளன.

முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளான கீழ்குளம், புதுக்கடை, முன்சிறை, மங்காடு, கூட்டாலுமூடு, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் வேதனையடைந்து வருகின்றனா்.

பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதிகளில் சீராக மின் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments