FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பெண் தீக்குளித்து தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:57 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுந்தயம்பலம், கல்லடை பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெனிபா (31). இத்தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட ஜெனிபா, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments