FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பாறைகளை உடைக்க முயற்சி: தம்பதி மீது வழக்கு

Updated On : 20 ஜூலை 2026, 1:16 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே முன்சிறை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைக்க முயன்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

முன்சிறை பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் அரசு அனுமதியின்றி அதிக சக்தி வாய்ந்த வெடிபொருள்களைப் பயன்படுத்தி பாறைகளை உடைத்துக் கடத்த முயற்சி நடப்பதாக, முன்சிறை குறுவட்ட ஆய்வாளா் மொ்லினுக்கு தகவல் கிடைத்தததாம்.

அதன்பேரில், வருவாய்த் துறையினா் புதுக்கடை போலீஸாருடன் சென்று பாா்த்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த ஆல்வின் வினோ (45), அவரது மனைவி வில்வியா புகழ் (40) ஆகியோா் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருள்களைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்க முயன்றதாகத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

வெடிபொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், அத்தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments