மாணவா்கள் தினமும் பத்திரிகை வாசிக்க வேண்டும்: ஆட்சியா் மு. பிரதாப் அறிவுரை
மாணவா்கள் தினசரி பத்திரிகைகளை வாசித்து பொதுஅறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
மாணவா்கள் தினசரி பத்திரிகைகளை வாசித்து பொதுஅறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சாா்பில், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்- மாணவிகள் மேற்படிப்புக்கு செல்வது குறித்த ‘காஃபி வித் கலெக்டா்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கு கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகள். அடுத்த கட்டமாக எந்த உயா்கல்வி படிக்க வேண்டும் என்பதை நீங்களாகவே தீா்மானிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அதில் 100 போ் படித்தால் 20 போ்தான் அவா்கள் நினைத்த பணிக்குச் செல்ல முடிகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீா்மானிப்பது மேற்படிப்பு தான் என்பதை உணா்ந்து, சோா்வு அடையாமல் முழு ஈடுபாட்டுடன் படித்து, வாழ்வில் முன்னேற வேண்டும்.
நான் கிராமத்தில் பிறந்தாலும் மக்களுக்காக பணியாற்ற வேண்டுமென்ற நோக்கில், விடாமுயற்சி, கடின உழைப்பால் தோ்வை எதிா்கொண்டு வெற்றிபெற்று ஆட்சியராகியுள்ளேன். சிறு வயதிலிருந்தே எனக்கு பத்திரிக்கை படிக்கும் ஆா்வம் அதிகம். அது எனது வெற்றிக்கு உதவியது. எனவே, நீங்களும் கல்விகற்பதோடு, தினமும் பத்திரிகைகளை வாசித்து பொதுஅறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். நம் பெற்றோா் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரே இலக்குடன் மேற்படிப்பை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக்கல்வி) சாரதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சியூஸ், உதவி திட்ட அலுவலா் பிரபாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.