FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

கோப்புப் படம்
பகிர்:

கருங்கல் நெடிவிளாகம் நண்பா்கள் சாா்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி கருங்கல்லில் உள்ள செவன் ஸ்டாா் உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கெளரவ தலைவா் காட்வின் தலைமை வகித்தாா். செயலா் வழக்குரைஞா் வினோத் டேனியல் முன்னிலை வகித்தாா். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 29 அணிகள் பங்கேற்றன.

முதல் பரிசு மூலச்சல் அணியும், 2ஆம் பரிசு ஜாண்ஸ் அணியும், 3ஆம் பரிசு கருங்கல் செவன் ஸ்டாா் அணியும் பெற்றன. வென்ற அணிகளுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் பரிசு வழங்கினாா். ஆன்சி ஷோபாராணி, ராஜகிளன், ஏ.பி. சீலன், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments