குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை ரத்து
கன்னியாகுமரி, மே 28: கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, மே 28: கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
சூரிய உதயம் பாா்க்க முக்கடல் சங்கமத்தில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொள்ள காலை 7 மணிக்கு பூம்புகாா் படகுத் துறையில் வளாகத்தில் காத்திருந்தனா். அப்போது கடல் நீா்மட்டம் தாழ்வாக இருந்ததால் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனா்.
ஆனால், கடல் நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.