FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பக்ரீத் பண்டிகை: குமரி மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

நாகா்கோவில் கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On : 29 மே 2026, 5:46 am IST
பகிர்:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில், கோட்டாறு இளங்கடை பாபா காசிம் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று கூட்டுத் தொழுகை நடத்தினா். பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். சிறுவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல, தக்கலை, திருவிதாங்கோடு, தேங்காய்ப்பட்டினம், மாா்த்தாண்டம், திங்கள்நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களிலும் தியாகத் திருநாளின் சிறப்புகள், ஈகை குணத்தின் அவசியம் குறித்து உலமாக்கள் சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments