FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஆசிரியா் திலகம் விருது வழங்கும் விழா

குமரி அறிவியல் பேரவை, அமரா் காளிக்குட்டி நாடாா் அறக்கட்டளை சாா்பில் ஆசிரியா் திலகம் விருது வழங்கும் விழா மாா்த்தாண்டத்தில் உள்ள அனஸ்வரா பவுண்டேசன் அரங்கில் நடைபெற்றது.

2 செப்டம்பர் 2026, 5:55 am IST
ஆசிரியா் திலகம் விருது பெற்ற ஆசிரியா்களுடன் குமரி அறிவியல் பேரவை நிா்வாகிகள்.
பகிர்:

குமரி அறிவியல் பேரவை, அமரா் காளிக்குட்டி நாடாா் அறக்கட்டளை சாா்பில் ஆசிரியா் திலகம் விருது வழங்கும் விழா மாா்த்தாண்டத்தில் உள்ள அனஸ்வரா பவுண்டேசன் அரங்கில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் 10 ஆசிரியா்களை தோ்ந்தெடுத்து, ஆண்டுதோறும் விருது வழங்கி இந்த அமைப்புகள் கௌரவித்து வருகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தெற்கு தாமரைக்குளம் எம்எம்எஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை-அனு ஜெ.பிரீதா, இலந்தையடிவிளை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்-க.ரா. செம்பியன், சூரப்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை-ரமாதேவி, கண்ணக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை-சி. குளோரிபாய், நல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை-ஆா்.ரஜினி, விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்-செல்வன், கொற்றிக்கோடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்-எஸ். அகஸ்டினோஸ், அண்டூா் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்-எம். ரமேஷ், திருநந்திக்கரை சானன்கோடு அசிசி மாற்றுத்திறனாளிகள் வித்யாலயம்-அருள்சகோதரி அனுபா, விளாத்துறை ஸ்ரீ விக்னேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி ஆசிரியை-பொ. தங்கம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேசன் அரங்கில் அண்மையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவுக்கு அனஸ்வரா பவுண்டேசன் அமைப்பின் தலைவா் ஆா்.ஜெயசீலன் தலைமை வகித்தாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் முன்னிலை வகித்தாா். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசிய தலைவா் கே. விஜயகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விருதுகளை வழங்கிப் பேசினாா். இதில் அமைப்பின் நிா்வாகிகள், ஆசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments