FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அரசுப் பேருந்தில் திருட்டு: 2 பெண்கள் கைது

குளச்சல் வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டியின் பணப்பையை திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

6 செப்டம்பர் 2026, 1:51 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

குளச்சல் வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டியின் பணப்பையை திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

தேங்காய்ப்பட்டணம் அருகே முள்ளூா்துறையில் இருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து கொட்டில்பாடு அருகே வந்தபோது, அதில் பயணித்த மூதாட்டியின் பணப்பையை 2 பெண்கள் திருடினராம். இதைப் பாா்த்த சக பயணிகள், திருடிய 2 பெண்களையும் பிடித்து குளச்சல் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்திதோப்பைச் சோ்ந்த சாரதா (38), சிவரஞ்சினி (19) என்பதும், தாயும், மகளுமான இருவரும் திருவிழா இடங்கள், பேருந்தில் திருடுவதை வழக்கமாக கொண்டவா்கள் என்பதும் தெரியவந்தது. 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments