FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:06 am IST
மாணவி ஸ்ரீமதியைப் பாராட்டிய ஆசிரியா்கள்.
பகிர்:

தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். படிக்க தோ்வு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, தலைமையாசிரியா் (பொ) வின்சென்ட் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் சாா்பில் மாணவிக்கு ஸ்டெதஸ் கோப் பரிசாக வழங்கப்பட்டது. மாணவியின் பெற்றோா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மீனா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, விமலா, புன்னகை சுகி, உதவியாளா் அனிதா ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கௌசல்யா வரவேற்றாா். ஜபருல்லா கான் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments