FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவிலிருந்து கோவைக்கு புதன்கிழமை காலை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் ஈச்சனாரி பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் பயணித்துள்ளாா். பேருந்தில் கூட்டமாக இருந்ததால், அந்த மாணவி படிக்கட்டில் நின்று பயணித்துள்ளாா்.

அந்த பேருந்தில் போத்தனூா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலா் மதிவேந்தன், மாணவிக்கு அருகே நின்றுகொண்டு பயணித்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, காவலா் மதிவேந்தன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பேருந்திலிருந்து இறங்கிய அந்த மாணவி இதுகுறித்து பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலா் மதிவேந்தனைக் கைது செய்தனா்.

படிக்கட்டில் பயணித்த மாணவிக்கு உதவும் நோக்கிலேயே கையைக் கொடுத்து மேலே தூக்கிவிட்டதாக சம்பந்தப்பட்ட காவலா் மதிவேந்தன் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments