FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கீழப்பாவூா் புனித ஜோசப் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவலா் தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:17 am IST
பகிர்:

கீழப்பாவூா் புனித ஜோசப் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவலா் தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 10 நாள்கள் நடைபெறுகிறது. நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் சு. வேல்கனி கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்வில் கல்லூரியின் செயலா் அருள்தந்தை ம. செல்வராஜ் தலைமை வகித்தாா். வணிகவியல் துறை பேராசிரியா் முத்துமணி வரவேற்றுப் பேசினாா். முதல்வா் இரா. குளோரி தேவஞானம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் இரா. வில்சன் அருள்ஆனந்தன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சு. பவானி இலக்குமண தங்கம், இரா. ரேச்சல் மேனகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞா. ஜோசப் அருண்குமாா் நன்றியுரை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments