கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
பரமக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள் தடுப்புக் குழு சாா்பில், நடைபெற்ற பேரணிக்கு கல்லூரி முதல்வா் அறிவழகன் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை தலைவா்கள் முன்னிலை வகித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக் பேரணியைத் தொடங்கிவைத்தாா்.
கல்லூரியில் தொடங்கிய பேரணியில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களை தவிா்ப்போம், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற பதாகைகளை ஏந்தி சந்தைக்கடை தெரு, பேருந்து நிலையம் வரை சென்றனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
கல்லூரி போதைப் பொருள் தடுப்புக் குழு அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.