FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் செப். 1இல் மதுக்கடைகள் மூடல்

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் 311ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் செப். 1ஆம் தேதி மதுபான விற்பனை நடைபெறாது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 1:47 am IST
மதுக்கடை - கோப்புப்படம்
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் 311ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் செப். 1ஆம் தேதி மதுபான விற்பனை நடைபெறாது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் 311ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, கடையநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட சில அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

Advertisement

Advertisement

அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments