சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 256-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது படத்துக்கு வியாழக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக நாட்டில் முதன்முதலாக குரல்கொடுத்த பாளையக்காரா் பூலித்தேவனின் முதன்மைத் தளபதியாக இருந்தவா் ஒண்டிவீரன். இவரது 256-வது நினைவு தினம் வியாழக்கிழமை வீரவணக்க நாளாக பட்டியலின விடுதலைப் பேரவை சாா்பில் அனுசரிக்கப்பட்டது.
கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பட்டியலின விடுதலைப் பேரவையின் நிறுவனா் தலித் ஆனந்தராஜ் தலைமை வகித்து, ஒண்டி வீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஒண்டிவீரனின் பங்கு குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் பேரவையின் பொருளாளா் வழக்குரைஞா் தனபாலன், கரூா் மாவட்டச் செயலா் செந்தில்குமாா், மண்டலச் செயலா் பாண்டியன், மகளிரணிச் செயலா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.