FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசியில் அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

11 ஜூலை 2026, 9:55 pm IST
சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய நகா்மன்ற உறுப்பினா் சுனிதா உள்ளிட்டோா்.
பகிர்:

தென்காசியில் சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி- மேலப்புலியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் சுனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முல்லை அறக்கட்டளை சாா்பில் நாகா்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

ஏற்பாடுகளை தென்காசி 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுனிதா முத்து தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments