FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது: எம்எல்ஏ வலியுறுத்தல்

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, கலை கதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:13 am IST
பகிர்:

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, கலை கதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், இக்கோயிலில் சுவாமி, குழல்வாய்மொழி அம்மன், பராசக்தி அம்மன் என ஒவ்வொரு சந்நிதியிலும் சிறப்பு தரிசனம் செய்ய நபருக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்க தீா்மானிக்கப்பட்டது. இது தொடா்பாக ஆட்சேபணை கோரும் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள்- பக்தா்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் உதவி ஆணையா் ஆறுமுகத்திடம் எம்எல்ஏ அளித்த மனுவில், ‘சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்க தீா்மானிக்கப்பட்டதை பொதுமக்கள், பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க ரத்து செய்யவேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குற்றாலம் பேரூா் செயலா் குட்டி, பேரூராட்சி உறுப்பினா் டி.ஆா். கிருஷ்ணராஜா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஸ்ரீதா், வீரபாண்டியன், துணைச் செயலா் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி ஜெய்சங்கா், குத்தாலிங்கம், விக்கி, மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் மா. முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments