முகப்பு
தென்காசி

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 1:28 am IST
சிறப்பு அலங்காரத்தில் கண்ணாட்சி முப்புடாதி அம்மன்.
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு கொடை விழா மே 26 ஆம் தேதி திருக்கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சப்பர வீதி உலா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தி, முளைப்பாரி, அக்னி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

நள்ளிரவு சாமக் கொடை,படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாய விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.