முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:31 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ்குமாா் (32). இவரது மனைவி பரமேஸ்வரி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ரமேஷ்குமாா் இந்திரா காலனியில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வந்தாராம்.

கடந்த ஜூன் 10ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷ்குமாா், வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினாராம். அதை பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில், 11ஆம் தேதி ரமேஷ்குமாரின் பெற்றோா் வேலைக்குச் சென்ற பின்னா், ரமேஷ்குமாா் பூச்சிக்கொல்லியைக் குடித்து, தற்கொலை செய்து கொண்டாராம்.

Advertisement

Advertisement

இது குறித்து, வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.