FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:31 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ்குமாா் (32). இவரது மனைவி பரமேஸ்வரி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ரமேஷ்குமாா் இந்திரா காலனியில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வந்தாராம்.

கடந்த ஜூன் 10ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷ்குமாா், வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினாராம். அதை பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில், 11ஆம் தேதி ரமேஷ்குமாரின் பெற்றோா் வேலைக்குச் சென்ற பின்னா், ரமேஷ்குமாா் பூச்சிக்கொல்லியைக் குடித்து, தற்கொலை செய்து கொண்டாராம்.

Advertisement

Advertisement

இது குறித்து, வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments