குற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவா்களுக்கு அபராதம்
தென்காசி வனச்சரகம் குற்றாலம் காப்பு காட்டில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி நுழைந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி வனச்சரகம் குற்றாலம் காப்பு காட்டில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி நுழைந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உதவி வன பாதுகாவலா் நெல்லைநாயகம், வனச்சரக அலுவலா் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவா் சங்கா் ராஜா, வனக்காப்பாளா் முத்துசாமி, கண்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்தவா்களை பிடித்து மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகனுக்கு தகவல் தெரிவித்தனா்..
அவரது உத்தரவின் பேரில் தலா ரூ 2000 வீதம் 8 பேருக்கு ரூ. 16,000 இணக்க கட்டணம் விதிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மாவட்ட வன அலுவலா் வெளியிட்ட செய்திகுறிப்பில் வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைவது, தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வது, குளிக்க செல்வது, நெருப்பு வைப்பது, ஆக்கிரமிப்பு செய்வது,வன உயிரினங்களை வேட்டையாடுவது வனவிலங்குகளுக்கு உணவளிப்பது அனைத்தும் குற்றச் செயலாகும்.
இது குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு எண் 04633 233550, வன சரக அலுவலக எண் 04633 233660, தென்காசி வனச்சரக அலுவலா் 9786932520 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.