ஆலங்குளத்தில் ஜமாபந்தி தொடக்கம்
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கீழப்பாவூா் குறுவட்ட பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை சாா்ந்த மனுக்களை வழங்கினா். முதல் நாளில் 48 மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியா் பரமசிவன், துணை வட்டாட்சியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா். முன்னதாக, வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆலங்குளம் பரும்பு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் 40 க்கும் மேற்பட்டோா், வாடகை வீட்டில் வசிக்கும் தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.
Advertisement
Advertisement