ஆலங்குளத்தில் விழிப்புணா்வுப் பேரணி
ஆலங்குளம், நல்லூா், சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம், நல்லூா், சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். வில்சன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஆசீா் ஜெபக்குமாா் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் 120 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கல்லூரியின் தேசிய பசுமைப் படை அலுவலா்கள் சசி புனிதா, வில்சன் எவா்பிரைட், உடற்கல்வி இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங், பேராசிரியா் மரிய கலைச்செல்வி, எஸ். ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.