FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

எஸ். தங்கப்பழம் கல்லூரி ஆண்டு விழா

வாசுதேவநல்லூா், எஸ். தங்கப்பழம் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மே 2026, 3:04 am IST
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி நிா்வாகத்தினா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், எஸ். தங்கப்பழம் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் எஸ். தங்கப்பழம் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன், கல்லூரி இயக்குநா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஏ.ஜெ. ரத்ன பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி அலுவலா் இன்பராஜ் கனகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் பாரதி வரவேற்றாா். மருத்துவா் கவிதா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments