கல்லூரி மாணவர்களிடையே தகராறு
பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
திருநெல்வேலி அருகே தேவர்குளத்தைச் சேர்ந்தவர் அஜய். பாளையங்கோட்டை அன்புநகரைச் சேர்ந்தவர் முகேஷ். இருவரும் பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றனர். நான்குனேரி வட்டம், விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த ராஜா (20). இவரும், அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அஜய், ராஜா ஆகியோரிடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். இதனைத் தொடர்ந்து மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்து அனுப்பினராம். இதனிடையே, புதன்கிழமை மீண்டும் இம்மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், ராஜா சக மாணவர்களுடன் சென்று அஜய், முகேஷ் ஆகியோரை தாக்கினராம்.
இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டதாம். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.