நெல்லையில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சி.வே. மைதிலி தலைமை வகித்தார். கல்லூரியின் மாணவர் பேரவைக்கு பாட வாரியாக பல்வேறு துறைகளுக்கான பிரதிநிதிகள், பேரவைத் தலைவர், செயலர் உள்பட 24 பேர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றனர். சுரண்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எம்.எம். செந்தமிழ்ச்செல்வி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பி. மகாலட்சுமி வரவேற்றார். பேரவைத் தலைவி எம். உமா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.