இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி
நன்னெறித் தொடர்பகம் அமைப்பு சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன்
நன்னெறித் தொடர்பகம் அமைப்பு சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் பொ.இளஞ்செழியன் தலைமை வகித்தார். வே.இரா.செய்யதுஅலி, மா.விசயக்குமார் பாக்கியம், வழக்குரைஞர் தெள.அப்துல் ஜப்பார், ச.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈ.தமிழீழன் வரவேற்றார்.
'நம்மாழ்வாரின் பணிகள்' என்ற தலைப்பில் உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனர் பி.மைக்கேல் செயராசா, "நெல் ஜெயராமனும், தமிழக பாரம்பரிய நெல் விதைகளும்' என்ற தலைப்பில் இரா.குமாரசாமி ஆகியோர் பேசினர். இயற்கை வேளாண்மையால் கிடைக்கும் நன்மைகள், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பா.மாரிகணேசன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.