விவேகானந்த கேந்திரக் கூட்டம்
விவேகானந்த கேந்திரத்தின் திருநெல்வேலி கிளைக்கூட்டம் பாளை.யில் நடைபெற்றது.
விவேகானந்த கேந்திரத்தின் திருநெல்வேலி கிளைக்கூட்டம் பாளை.யில் நடைபெற்றது.
கேந்திர பொறுப்பாளர் சொ.முத்துசாமி தலைமை வகித்தார். கலா நாகராஜன் அறிக்கை வாசித்தார். அந்தமான்-நிகோபார் தீவுகளில் கேந்திர தொண்டர்களின் பணி என்ற தலைப்பில் பன்னீர்செல்வம் சொற்பொழிவாற்றினார்.
ஜூலை 4 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ள விவேகானந்தர் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது, கேந்திரத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. வெள்ளைத்துரை, ஹரிஹரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.