FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

26 செப்டம்பர் 2025, 2:20 am IST
பகிர்:

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி சாா்பில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான அண்ணா மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

17 முதல் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்கள் என இரு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும்

Advertisement

Advertisement

இப்போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசு வழங்கப்படவுள்ளது.

25 வயதிற்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. (அண்ணா விளையாட்டரங்கம்-ஆச்சிமடம் சென்று திரும்புதல்) பெண்களுக்கு 5 கி.மீ. (அண்ணா விளையாட்டரம்- சீனிவாச நகா் வரை சென்று திரும்புதல்), 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. (அண்ணா விளையாட்டரங்கம்- கிருஷ்ணாபுரம் வரை சென்று திரும்புதல்), பெண்களுக்கு 5 கி.மீ. என போட்டி தொலைவு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாரத்தானில் பங்கேற்க வயது சான்றிதழுக்கு ஆதாரமாக ஆதாா் அட்டையுடன் காலை 6 மணிக்கு விளையாட்டரங்குக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments