நெல்லையில் காவல் துறை மீதான லஞ்சப் புகாருக்கு தனி எண் அறிமுகம்
காவல்துறையினா் மீதான லஞ்சப் புகாா்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் தனி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினா் மீதான லஞ்சப் புகாா்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் தனி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகர காவல்துறையின் ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மாநகரில் காவல்துறையினா் தங்களது பணிகளை மேற்கொள்ள லஞ்சம் கேட்டால், அது குறித்த தகவலை பொதுமக்கள் ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவுக்கு 9952540100 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவா்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும், புகாா் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.