FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

த்ரெட்ஸ் செயலியில் மெட்டா ஏஐ வசதி!

த்ரெட்ஸ் செயலியில் மெட்டா ஏஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 6:24 pm IST
த்ரெட்ஸ் - படம் / நன்றி - த்ரெட்ஸ்
பகிர்:

த்ரெட்ஸ் செயலியில் மெட்டா ஏஐ (செய்யறிவு) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேசேஜ் அனுப்பும் தகவல் பரிமாற்றப் பகுதியில் இந்த மெட்டா ஏஐ அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மற்றவருடன் டெக்ஸ்ட் (TEXT) செய்துகொண்டு இருக்கும்போதே மெட்டா ஏஐ பயன்படுத்தி தகவல்களை சரிபார்க்க முடியும்; கூடுதல் தரவுகளைப் பெற முடியும் என த்ரெட்ஸ் (Threads) தெரிவித்துள்ளது.

முகநூல், வாட்ஸ்ஆப் போன்று த்ரெட்ஸ் செயலியும் அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். இன்ஸ்டாகிராமின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகவும், எக்ஸ் தளத்தின் பிரதிபலிப்பாகவும் த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டது.

Advertisement

Advertisement

உலகம் முழுவதும் 500 மில்லியன் (50 கோடி) பயனர்கள் த்ரெட்ஸ் செயலிக்கு உள்ளனர். இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையிலானோர் த்ரெட்ஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது புதிய அம்சங்களை த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யும்.

அந்தவகையில் தற்போது மெசேஜ் அனுப்பப்படும் நேரடி தகவல் பரிமாற்றப் பகுதியில் (DM) மெட்டா ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மெசேஜ் செய்துகொண்டிருக்கும்போதே மெட்டா ஏஐ பயன்படுத்தி கூடுதல் தரவுகளை பயனர்கள் பெறலாம். பெற்ற தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

இதற்காக த்ரெட்ஸ் செயலியில் இருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. த்ரெட்ஸ் செயலிக்குள்ளாக இருந்தே இதனை இயக்கலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

த்ரெட்ஸ் செயலி பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இந்த அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Meta rolling out Meta AI chatbot within Threads DMs giving users

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments