நெல்லை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் 2 ஆவது நாளாக காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதையடுத்து மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் 2 ஆவது நாளாக காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதையடுத்து மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதால் இரண்டு (ஆக. 19, 20) நாள்கள் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகளின் அறிவிப்புக்குப் பின்னரே கடலுக்குச் செல்ல இருப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.