FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் 22ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
மாணவிக்கு பட்டம் வழங்கினாா் திருநெல்வேலி மாவட்ட சிப்காட் சிறப்பு வருவாய் அலுவலா் சிவகாமி. உடன் கல்லூரி முதல்வா் கே. சகாயராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் 22ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி சிப்காட் சிறப்பு வருவாய் அலுவலா் சிவகாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 180 மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கல்லூரிகளின் இயக்குநா் வெளியப்பன் வாழ்த்திப் பேசினாா். முதல்வா் கே. சகாயராஜ் அறிக்கை வாசித்தாா்.

Advertisement

Advertisement

கல்லூரி பல்வேறுத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments