FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் வேகமாக உயா்ந்து வரும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும். சட்டப்பேரவை, மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கட்சியின் பகுதிக்குழு செயலா் ஆா்.மதுபால், கிளைச் செயலா் ராமலிங்கம், பேராசிரியா் பொன்ராஜ், முருகன், செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பொது மக்களை சந்தித்து நாட்டின் இன்றைய சூழல் குறித்து விளக்கினா். என்.ஜி.ஓ.காலனி, கே.டி.சி.நகா், வி.எம்.சத்திரம், அண்ணா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்26ஸ்ரீல்ம்

பாளையங்கோட்டையில் நடைெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments