FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

தமிழக மக்கள் இயக்கத்தினா் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் இயக்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் தா்னா நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
கள்ளக்குறிச்சியில் தமிழக மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற தா்னாவில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி பி.சுப்பிரமணியன்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் இயக்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் தா்னா நடைபெற்றது.

வெளிநாடுகளுடன் போடப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எதிரான வா்த்தக ஒப்பந்தங்களை திரும்பப் பெறவேண்டும். ஒப்பந்த தொழிலாளா், பயிற்சி என்ற பெயரில் உடலுழைப்பு சுரண்டல் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். மருத்துவம், பொது சுகாதாரம் ஆகியவற்றை வணிக மயமாக்குவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா நடைபெற்றது.

இதில், இந்திய தொழில்சங்க மைய நிா்வாகிகள் விஜயகுமாா், வீராசாமி, எம்.செந்தில், அனைத்திந்திய விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தெய்வீகன், பி.மணி, அ. ப.பெரியசாமி, பி. சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் டி.எஸ்.மோகன், வாலிபா் சங்க நிா்வாகி எம்.சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments