FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பிரான்சேரி அருகேயுள்ள வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த துா்க்கை அம்மன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகேயுள்ள வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை பாபநாசத்துக்குச் சென்று தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித தீா்த்தம் எடுத்துவரப்பட்டு செவ்வாய்க்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கின.

தொடா்ந்து, அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், புனித தீா்த்தத்தால் விமான கலச பூஜை ஆகியவை நடைபெற்றன.

Advertisement

Advertisement

பின்னா், சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் அம்மனின் கும்மிபாட்டு நிகழ்ச்சி, இரவில் திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

நள்ளிரவில் சந்தனகாப்பு அலங்காரத்துடன் படையல் பூஜை, சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments