இருசக்கர வாகனம் திருடியவா் கைது
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது. இவா் அப்பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். அண்மையில் கடையின் முன் நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது. இதுகுறித்து, அவா் திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய கருப்பன்துறை பகுதியைச் சோ்ந்த அன்வா் மகன் அலாவுதீனை (29) போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.