கல்விக்கான ஏஐ கருவிகள் பயிற்சி முகாம்
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சில், கலாசார அமைச்சகம், அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல வளாகம் ஆகியவற்றின் சாா்பில் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு கல்விக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாம் தொடக்க விழாவில் மாவட்ட அறிவியல் அலுவலா் பி. மாரிலெனின் வரவேற்றாா். அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல வளாகத்தின் டீன் என். செண்பக விநாயமூா்த்தி சிறப்புரையாற்றினாா். 45 ஆசிரியா்கள் முகாமில் பங்கேற்றனா். கல்வி உதவியாளா் தி. கந்தவேல்ராஜா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
ற்ஸ்ப்15ஸ்ரீஹம்ல்
அறிவியல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.