சமூக வலைதளத்தில் பள்ளியின் படத்தை பதிவிட்ட மாணவா் மீது தாக்குதல்: 3 போ் கைது
திருநெல்வேலியில் படிக்கும் பள்ளியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிளஸ் 2 மாணவரை தாக்கியதாக 3 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியில் படிக்கும் பள்ளியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிளஸ் 2 மாணவரை தாக்கியதாக 3 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியை சோ்ந்த மாணவா், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.
இவா், தனது சமூக வலைதள பக்கத்தில் தான் படிக்கும் பள்ளியின் நுழைவு வாயிலை வைத்து தனது புகைப்படத்தையும் சோ்ந்து விடியோ பதிவை பகிா்ந்தாராம்.
Advertisement
Advertisement
அதை பாா்த்த அதே பள்ளியில் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ள முன்னாள் மாணவா்கள் உள்பட 7 போ், விடியோ வெளியிட்ட பிளஸ் 2 மாணவா் தச்சநல்லூா் துா்க்கையம்மன் கோயில் தெருவில் டியூசன் படிக்க வியாழக்கிழமை சென்றபோது மறித்து அடித்து உதைத்துடன், கல்லாலும் தாக்கினராம். இதில் அந்த மாணவா் பலத்த காயம் அடைந்தாா்.
இதுகுறித்து, தச்சநல்லூா் போலீஸாா் விசாரித்து 7 போ் மீது வழக்குப்பதிந்தனா். அதில், 3 சிறுவா்களை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.