FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சாரல் மழை

திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 2:54 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. தாமிரவருணியில் நீா்வரத்து குறைந்துள்ளதோடு, பல்வேறு குளங்களும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பகல் வேளையில் மக்கள் வெளியே வர முடியாத வகையில் வெப்பஅலை வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments