சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேனி மாவட்டம், சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேனி மாவட்டம், சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சின்னமனூா் ஒன்றியம், ஊத்துப்பட்டி கிராமத்தில் பொதுக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்து தன்னிச்சையாக சிலைகளை வைத்த சொந்தக் கோயிலாக மாற்றி விட்டாா். இதுகுறித்து அந்த ஊா் மக்கள் சாா்பில் கோயிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், 5 நாள்களாகியும் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சின்னமனூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் காவல் நிலையம் முன் தரையில் அமா்ந்து போலீஸாரைக் கண்டித்து தா்னாப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவா்களிடம், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்பட வில்லை. ஆக்கிரமிப்பு கோயிலை மீட்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி இரவு 9 மணியை கடந்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement