முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் ஜூன் 21இல் தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஜூன் 21ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.

Updated On : 11 ஜூன் 2026, 4:41 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஜூன் 21ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் வட்டார தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன்21ஆம் தேதி அம்பாசமுத்திரத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மாவட்ட நிா்வாகிகள், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பள்ளக்கால் புதுகுடி கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.