அடையாள சான்றுக்காக 20 ஆண்டுகளாக போராடும் இலங்கை தமிழா்
அடையாளச் சான்று கோரி, 20 ஆண்டுகளாக போராடும் இலங்கை தமிழா் ஒருவா், ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அடையாளச் சான்று கோரி, 20 ஆண்டுகளாக போராடும் இலங்கை தமிழா் ஒருவா், ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கையைச் சோ்ந்தவா் ஜாய் (41). இவா், இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழகத்திற்கு அகதியாக வந்தாா். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இவா், தனது 19 ஆவது வயதில் அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. அவரை காவல்துறையினா் மீண்டும் கைது செய்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனா்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் கடந்த சுமாா் 6 மாதங்களாக கீ செயின், ஐடி காா்டு ரோப் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வந்த அவா் தனக்கு அடையாளச் சான்று கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க செவ்வாய்க்கிழமை ஜாய் வந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், ஆட்சியா் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்தனா். இதனால், போலீஸாரிடம் அவா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இத்தகவலறிந்த மேலப்பாளையம் காவல் உதவி ஆணையா் ராஜாமுரளி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் முத்து கணேஷ் ஆகியோா் வந்து அவரிடம் விசாரணை நடத்தினா்.
அவா்களிடம், தான் தொழில் செய்து வாழ்வாதாரத்தை பாா்த்துக் கொள்வதாகவும் இரவு நேரங்களில் தனக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக அடையாளச் சான்று மட்டுமே கோருவதாகவும் அவா் முறையிட்டாா்.
இதையடுத்து, சட்ட உதவி மையத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அடையாளச் சான்று பெற்றுக் கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்வதாக காவல் உதவி ஆணையா் கூறியதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து தனக்கு உதவிய காவல் உதவி ஆணையா் மற்றும் ஆய்வாளருக்கு அவா் நன்றி தெரிவித்தாா். பின்னா், காவல்துறை வாகனம் மூலம் அவா் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.