தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு துண்டுப் பிரசுரம் விநியோகம்
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைமை போக்குவரத்து ஆய்வாளர் ஜட்சன் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் துண்டுப் பிரசுரங்களை பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம், ஆசிரியர் சீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.