தூத்துக்குடியில் கோயில் விழாவில் இளைஞர் கொலை
தூத்துக்குடியில் கோயில் விழாவில் இளைஞர் கொலை
தூத்துக்குடியில் கோயில் விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ராஜபாண்டிநகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அஜித்குமார் (22). கோவையில் வேலைபார்த்து வந்த இவர், ராஜபாண்டிநகரில் உள்ள ஓம் சக்தி கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்தாராம். அப்போது, அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது அஜித்குமாரின் தோள்பட்டை பகுதியில் அவர்கள் வாளால் குத்திவிட்டு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனராம். சிறிது நேரத்தில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சங்கர், அவரது மகன் பாரதி உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.