மாநில ஸ்கேட்டிங் போட்டி: ஸ்ரீகரா பள்ளி சிறப்பிடம்
தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்ரீகரா சி.பி.எஸ்.இ. வித்யா மந்தீர் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்ரீகரா சி.பி.எஸ்.இ. வித்யா மந்தீர் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தென்காசி யு.பி.எஸ். கல்லூரி வளாகத்தில் விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா அசோஸியேஷன் சார்பில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், ஸ்ரீகரா சிபிஎஸ்இ வித்யா மந்தீர் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவர்கள் வெற்றி பெற்று 3ஆம் இடம் பிடித்தனர்.
இந்த மாணவர், மாணவிகளையும், பயிற்சியாளர்களையும் பள்ளித் தலைவர் செந்தில்குமார், தாளாளர் ஷியாமளா செந்தில்குமார், செயல் இயக்குநர் டென்சிங் பால்ராஜன், நிர்வாக இயக்குநர் கண்ணன், பள்ளி முதல்வர் ராதாமுரளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.