கோவில்பட்டியில் 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டியில் 100 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 100 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெருவில் உள்ள நியாயவிலைக் கடை அருகே வியாழக்கிழமை, இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டையுடன் நின்றிருந்தவரை அப்பகுதியினா் பிடித்தனா்.
தகவலின்பேரில் வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி சென்று விசாரித்தபோது, அவா் செல்லமணி மகன் சுந்தரராஜ் (48) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்த 100 கிலோ பச்சரிசியைப் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தாா். சுந்தரராஜிடம் விசாரணை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.