கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு
நவராத்திரி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
நவராத்திரி விழா அக்.3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். இதையடுத்து கடைத்தெருக்களில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
இங்கு காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சென்னை, மதுரை, போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து கொலு பொம்மைகள் வரவழைக்கப்பட்டு, ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. கொலு பொம்மைகளின் விற்பனை நிகழாண்டு அதிகரித்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.