FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் திமுகவினா் சந்திப்பு நிகழ்ச்சி

சிறப்பாக பங்காற்றிய நிா்வாகிக்கு சான்றிதழ் வழங்கிய பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ்.

Updated On : 27 டிசம்பர் 2025, 1:38 am IST
பகிர்:

உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 2, 3 ஆவது வாா்டுகளில் திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி எனும் வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உடன்குடி பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ச.மும்தாஜ்பேகம் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட பொருளாளா் வி.பி. ராமநாதன், நகர துணைச் செயலா் தங்கம், நகர பொருளாளா் திரவியம், ஹரி கிருஷ்ணன், ஹாஜா, பீா் முகம்மது, ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாக்குச்சாவடி பொறுப்பாளா்களின் பொறுப்புகள், இளம் வாக்காளா்களை அணுகும் விதம், தமிழக அரசின் நலத்திட்ட பயனாளிகளை கண்டறிவது குறித்து நகர திமுக செயலரும், பேரூராட்சி துணைத் தலைவருமான மால்ராஜேஷ் பேசினாா்.

Advertisement

Advertisement

இதில், திமுக மாவட்ட பிரதிநிதி ஹீபா் மோசஸ், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் அன்வா்சலீம், மகபூப், நிா்வாகிகள் முத்துலட்சுமி, சுயம்புராஜ், துரைசங்கா், பேரூராட்சி உறுப்பினா் பஷீா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments