சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டையை வழங்கி மேயா் ஜெகன் பெரியசாமி பேசினாா். தொடா்ந்து அவா் மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், துணை மேயா் ஜெனிட்டா, தாட்கோ மேலாளா் ஜனனிஸ் டொ்சிபா, தூத்துக்குடி இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் சுமித்ரா, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அஸ்வின், மருத்துவா் முத்தழகு, மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் நெடுமாறன், ராஜபாண்டி, சுகாதார பணிக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், பகுதிச் செயலா் ரவீந்திரன், துரைமணி, ரமேஷ், பிரபாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.