FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் தலைமையாசிரியா் உயிரிழப்பு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் பள்ளித் தலைமையாசிரியா் உயிரிழந்தாா்.

நாலாட்டின்புதூா், ஆண்டாள் நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் காந்திராஜ் (56). இவா் கோவில்பட்டி அருகே உள்ள சென்னயம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (56), நாலாட்டின்புதூா் ரயில்வே காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நாலாட்டின்புதூா் விநாயகா் கோயிலுக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினா். நாலாட்டின்புதூா்-கோவில்பட்டி அணுகுசாலையில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் உள்ள வாருகால் சுவரில் மோதியது.

Advertisement

Advertisement

இதில் இருவரும் வாருகாலுக்குள் விழுந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் காந்திராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். ராஜேஸ்வரி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, நாலாடின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments